பொதுவாகவே, பெரியார் நார்த்திகவாதியாக, சமூக போராளியாக, முற்போக்கு சிந்தனையாளராக பார்க்கப்பட்ட போதும், அவர் முழு ஆன்மீக வாதியான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் ஏன் ஆதரித்தார்கள் அல்லது எதிர்க்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை.
ஏனெனில், பெரியார் எதிர்பார்த்த பெரும்பாலான சமூக மாற்றங்கள் அனைத்தும் 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்கள் தன் சொந்த மண்ணிலேயே நிகழ்த்தி காட்டி விட்டார்கள்..
எழுத்தாளர் மைக்கேல் ஹ ஹார்ட் எழுதிய தி 100 தலை சிறந்த 100 மனிதர்கள் எனும் புத்தகத்தில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை முதல் இடத்தில் குறிப்பிடுகிறார்., அதற்கான காரணத்தை அவர் கூறும்போது, ‘தன் வாழ்நாளிலேயே தான் கொண்டு வந்த கொள்கையை அமல்படுத்தி அதன் அடிப்படையில் உண்டான சமுதாயத்தை தன் கண் முன்னே பார்த்து சென்றவர்’ என்று குறிப்பிடுகிறார்.
ஏறத்தாழ, பெரியார் தம்முன் கண்ட, பெண் சிசுக் கொலை, வர்க்க வேறுபாடு, நிர்வான வழிபாடு, வட்டி, பெண்ணடிமை, நிற, குல அடிப்படையிலான தீண்டாமை, என அனைத்தும் முஹம்மது (ஸல்) காலத்திலும் சமூகத்தில் தலை விரித்தாடிக்கொண்டிருந்தது.
ஆனால், இவை அனைத்தும் முஹம்மது (ஸல்) அவர்களின் மூலம் 23 வருடங்களில் தீர்க்கப்பட்டு ஒரு அழகிய சமுதாயம் உருவானது. இன்று போராடி கேட்டுப் பெறுகிற ஒவ்வொரு சமூக நீதியும், முஹம்மது (ஸல்) அவர்கள் கொள்கைகளை பின்பற்றுகிறவர்களுக்கு முழுமையாக கிடைத்து விட்டது.
உலகத்தில் சமூக நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அணைத்து சமூக ஆர்வலர்களுக்கும் அவர் அணைத்து உலக பெரியாராகவே இருந்திருக்கிறார்.
ஆனால், முஹம்மது (ஸல்) அக் கொள்கைகளைப் பின் பற்றுபவர்கள் தவிர வேறு யாராலும் அதை உருவாக்க முடியாது.
பெரியார் தான் உருவாக்க நாடிய சமூகத்தின் பல்வேறு அம்சங்கள், கண் முன்னே, முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தில் இருக்கிறது.
இயல்பாகவே, சமூகத்தில் ஒரு சில தீமைகளை மட்டும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று நம் கம் முன்னே போர்த்துகல் கொண்டிருக்கிறோம்.
முஹம்மது (ஸல்)மேல் முஸ்லீம்கள் இவ்வளவு நேசம் வைத்திருப்பதற்கு காரணமும், அனைத்து சுதந்திரத்தையும் இலகுவாக அவர்கள் அனுபவிப்பது கொண்டிருப்பது ஒரு காரணமே.
இது ஆன்மீகப் பதிவல்ல.
No comments:
Post a Comment