கற்பழிப்புகள், கொலை, கொள்ளை, எதுவும் இல்லாத ஒரு தூய்மையான சமூகம் வேண்டும் என்று பல ஏக்கங்களை பார்க்க முடிகிறது . பலரின் நோக்கம் ஏதேனும் ஒரு தவறு நடந்தால் உடனே இறைவன் இறங்கி தண்டித்து விட வேண்டும் என்பதே.ஆனால், அப்படி ஒரு சமூகம் வாழ்வே செய்கிறது.அவைகள் மனிதர்கள் அல்லாத ஜீவராசிகள். அங்கே நூறு சதவீதம் குற்றங்கள் இல்லை.
நாம் சிந்திக்கும் அறிவு.கொடுக்கப் பட்ட மணித இனம்.
முறையற்ற செயலை செய்யக் கூடாது என்ற உள்ளுணர்வயும் நன்மை, தீமை களை பிரித்து அறியக் கூடிய, தீமை செய்தால் தண்டனை உண்டு என்ற பயத்தையும் நமக்கு உள்ளே வைத்தே இறைவன் படைத்திருக்கிறான்.
விலங்குகள் போல் அல்லாமல் நமக்கு மட்டும் ஏன் இந்த அறிவைக் கொடுத்துள்ளான்?..
ஏனெனில், சட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் சமூக அமைப்பாக வாழ வேண்டும் என்றே.
தவறுகள் நடக்கும் போது,கடுமையான தண்டனைகளை நீதி மன்றங்கள் கொடுத்தால், மனித இனம் குற்றங்கள் குறைந்ததாக சமூகமாக வழ முடியும்,
அப்படி ஒரு தெளிவான சட்டங்களை கொண்டதுதான் குர்ஆன். அதை எப்படி அமல் படுத்த வேண்டும் என்று நடை முறை படுத்தியவர்கள் இறைத்தூதர் முஹம்மது (சால்) அவர்கள்.
குர்ஆன் ஏன் பரிந்துரைக்க படுகிறது எனில், இந்த சட்டங்களை மனிதர்கள் உருவாக்குவதை விட படைத்த அந்த இறைவனே தருவது பொருத்தமாக இருக்கும் என்பாதனாலையே.
குர்ஆன் தன்னை இறைவனின் வேதம் என்கிறது.
கற்பழிப்பை தடுக்கும் ஆற்றல் சட்டத்திற்கும், அந்த சட்டத்தை இறைவனும் கொடுத்துள்ளான்.
அதற்க்கு ஒரு உதாரணம், முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய ஒரு சட்டமாகும்.
திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் கொடுங்கள்.
No comments:
Post a Comment